தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இம்மாத இறுதியில் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு வெளியிட எதிர்பார்ப்பு – பரீட்சை ஆணையாளர் நாயகம்

0 69

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகளுக்காக மாணவர்கள் காத்திருக்கும் நிலையில், கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதியில் வெளியிட எதிர்பார்ப்பதாக என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அத்துடன், பரீட்சை பெறுபேறுகளை கணனிமயமாக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை,  பரீட்சை பெறுபேறுகளை விரைவில் வெளியிட முடியும் என அண்மையில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது

Leave A Reply

Your email address will not be published.