தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இன்றைய வானிலை அறிக்கை

0 114

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்தியமலை நாட்டின் மேற்கு சரிவுப்பகுதிகளிலும் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மொணராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்

அனுராதபுரம் – பிரதானமாக சீரான வானிலை, மட்டக்களப்பு – பிரதானமாக சீரான வானிலை ,கொழும்பு – அடிக்கடி மழை பெய்யும், காலி – அடிக்கடி மழை பெய்யும், யாழ்ப்பாணம் – பிரதானமாக சீரான வானிலை, கண்டி – அடிக்கடி சிறிதளவில் மழை பெய்யும், நுவரெலியா – அடிக்கடி மழை பெய்யும், இரத்தினபுரி – அடிக்கடி மழை பெய்யும், திருகோணமல – பிரதானமாக சீரான வானிலை, மன்னார்​ – பிரதானமாக சீரான வானிலை

Leave A Reply

Your email address will not be published.