Developed by - Tamilosai
உலகக் கிண்ண தொடரிற்கான அடுத்தக்கட்ட டிக்கெட் விற்பனை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
அதற்கமைய இன்றைய தினம் இரவு எட்டு மணிக்கு நான்கு லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
அதன்படி, https://tickets.cricketworldcup.com/explore/c/icc-cricket-world-cup என்ற இணையதளத்தின் ஊடக ரசிகர்கள் டிக்கெட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
முன்னதாக உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரிற்கான முதற்கட்ட டிக்கெட் விற்பனைகள் கடந்த மூன்றாம் நிறைவடைந்ததாக பிசிசிஐ அறிவித்தது.
அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் இம் மாதம் 15ம் திகதி விற்பனை செய்யப்படவுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.