Developed by - Tamilosai
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை வழங்குவதற்காக மாத்திரம் இன்றையதினம் (30) அரச வங்கிகள் திறக்கப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அரச வங்கிகளுக்கு இன்று (30) விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் நலன்புரி கொடுப்பனவுக்காக மாத்திரம் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை அனைத்து அரச வங்கிக்கிளைகளும் திறக்கப்படவுள்ளன.
நிதி வழங்கல் தொடர்பான அனைத்து தொழில்நுட்ப பிரச்சினைகளையும் தீர்ப்பதற்காக அமைச்சின் அதிகாரிகளுக்கும் அரச வங்கி அதிகாரிகளுக்கும் இடையில் செவ்வாய்க்கிழமை (29) விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.
15 இலட்சம் பயனாளிகளில் முதற்கட்டமாக 8 இலட்சம் பயனாளிகளுக்கு ஜூலை மாதத்திற்கான கொடுப்பனவு திங்கட்கிழமை (28) அரச வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தகக்து