Developed by - Tamilosai
அரச மற்றும் அரச அங்கிகாரம் பெற்ற பாடசாலைகள் அனைத்தும் இரண்டாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் நடவடிக்கைகளுக்காக இன்றையதினம் (28) திறக்கப்படவுள்ளாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இன்றையதினம் ஆரம்பமாகவுள்ள இரண்டாம் தவணையின் இரண்டாம் கட்டம் ஒக்டோபர் 27 ஆம் திகதி வரை இடம்பெறும் எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
ஜூலை மாதம் 24 ஆம் திகதி ஆரம்பித்த 2ஆம் தவணையில் முதல் கட்ட கல்வி நடவடிக்கைகள் ஓகஸ்ட் 16ஆம் திகதியுடன் நிறைவடைந்ததுடன், கடந்த 17ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.