தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இத்தாலியின் லம்பேடுசா தீவு கடற்பரப்பில் படகு விபத்துக்குள்ளானதில் 41 பேர் பலி

0 100

இத்தாலியின் லம்பேடுசா தீவு கடற்பரப்பில் குடியேற்றவாசிகளை ஏற்றிச் சென்ற படகு விபத்துக்குள்ளானதில் 41 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எவ்வாறாயினும், இந்த விபத்தில் உயிருடன் பலர் மீட்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

துனிசியாவில் உள்ள ஸ்ஃபாக்ஸில் இருந்து புறப்பட்ட படகு இத்தாலிக்கு செல்லும் வழியில் விபத்துக்குள்ளாகி மூழ்கியதாக உயிர் பிழைத்தவர்கள் மீட்பு பணியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

ஒரு பெரிய அலையின் காரணமாக படகு கவிழ்ந்ததாகவும், படகில் இருந்த குடியேறிகள் கடலில் மூழ்கியதாகவும் உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிர் பாதுகாப்பு அங்கி அணிந்திருந்த 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இத்தாலி சிசிலி தீவு பகுதியில் இடம்பெற்ற படகு விபத்துகளைத் தொடர்ந்து ஒரு பெண் மற்றும் அவரது கைக்குழந்தை உயிரிழந்த, அதே நேரத்தில் 100 இற்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோரை மீட்க வேண்டியிருந்தது.

சிசிலி நீரிணை சமீப நாட்களில் மிகவும் கொந்தளிப்புடன் இருக்கின்றது. இதனால் இத்தாலிய கடலோர காவல்படை படகுகளில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்தோரை அடைய சிரமப்படுகின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை புதுப்பிக்கப்பட்ட உள்துறை அமைச்சக தரவுகளின்படி, 2022 ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் 42,600 இற்கும் அதிகமான குடியேறிகள் வருகை தந்திருந்தனர்.

எவ்வாறாயினும், இந்த ஆண்டு இதுவரை கிட்டத்தட்ட 92,000 பேர் வருகை தந்துள்ளதாகவும், இத்தாலி கடல் இடம்பெயர்வில் கூர்மையான எழுச்சியை அனுபவித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட ஆபிரிக்காவிலிருந்து ஐரோப்பாவிற்கு கடல் வழியாக கடக்கும் போது இந்த ஆண்டு இதுவரை 1,800 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எவ்வாறாயினும், சமீபத்திய நாட்களில், இத்தாலிய ரோந்து படகுகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் குழு லம்பேடுசாவில் வந்த மேலும் 2,000 பேரை பாதுகாப்பாக மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.