Developed by - Tamilosai
ஆப்கானிஸ்தானில் மீண்டும் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியான ஹெராட் நகருக்கு வடக்கே 28 கிலோமீட்டர் தொலைவில் இந்த புதிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 2,000க்கும் மேற்பட்ட உயிர்களை பலிகொண்ட நிலநடுக்கத்தை அடுத்து, மீண்டும் இவ்வாறு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இருப்பினும், புதிய நிலநடுக்கத்தின் தாக்கம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
கடந்த நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வீடுகள் அழிக்கப்பட்ட காரணத்தினால் இன்னும் வெளியில் தங்கியிருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான போர்வைகள், உணவு மற்றும் இதர பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் குறித்த செய்திகள் தெரிவிக்கின்றன.