Developed by - Tamilosai
அமெரிக்காவின் ஹவாய் தீவுக் கூட்டத்தில் மவுயி தீவு அமைந்துள்ளது. இந்தத் தீவில் உள்ள காடுகளில் திடீரென தீ பிடித்தது. வேகமாக வீசி வரும் காற்றினால் வனப்பகுதியில் தீ வேகமாக பரவியது.தீயை அணைக்கும் பணிகளில் தீயணைப்பு மற்றும் மீட்புக் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
வனப்பகுதியில் சிக்கியவர்களை பாதுகாப்பாக மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
லஹைனா பகுதியிலும் காட்டுத் தீ பரவியதால் வானுயர கரும்புகை எழுந்தது. அங்கு வசிக்கும் மக்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். அவர்களை பத்திரமாக மீட்க கடலோர பாதுகாப்பு படையினரால் ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டன.
இந்நிலையில், இந்த காட்டுத்தீயில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர் என மவுயி தீவு மேயர் ரிச்சர்ட் பைசன் தெரிவித்துள்ளார்.