2023 உலகக் கிண்ணப் போட்டி : இன்று இலங்கை அணி பங்கேற்கும் இறுதிப் போட்டி

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி பங்கேற்கும் இறுதிப்போட்டி இன்று நடைபெறவுள்ளது.

நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்தப் போட்டி இடம்பெறவுள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 41 ஆவது போட்டி பெங்களூரில் பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இரு அணிகளும் இதுவரை 8 போட்டிகளில் பலங்கேற்றுள்ள நிலையில், இந்தப் போட்டி இரு அணிகளுக்கும் மிக முக்கியமான போட்டியாக அமைகிறது.

புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ள நியூசிலாந்து அணி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்வதற்கு இந்தப் போட்டியில் வெற்றிபெறுவது அவசியமாகும்.

இதேவேளை, புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்தில் காணப்படும் இலங்கை அணி 2025ஆம் ஆண்டு நடைபெறவுள்ள செம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு தகுதிபெறுவதற்கு இன்றைய போட்டியில் வெற்றி பெறுவது மிகவும் அவசியமாகும்.

இதன்படி, இலங்கை அணி உலகக் கிண்ண தொடர்பில் இருந்து வெளியேறினாலும், எதிர்வரும் செம்பியன்ஸ் கிண்ண போட்டியில் இடம் பெறுவதற்கு இந்தப் போட்டியில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியமானது என அணியின் உதவிப் பயிற்றுவிப்பாளராகவும், துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளராகவும் பணியாற்றிவரும் நவீட் நவாஸ் (NAVEED NAWAZ ) ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

2023 உலகக் கிண்ணப் போட்டி : இன்று இலங்கை அணி பங்கேற்கும் இறுதிப் போட்டிஇலங்கை
Comments (0)
Add Comment