வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் சென்ற வேன் பள்ளத்தில் கவிழ்ந்தது

வெல்லவாய – கொஸ்லந்த வீதியில் ஹீவல்கந்துர பகுதியில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று இன்று (ஜூலை 26) அதிகாலை பள்ளத்தில் விழுந்துள்ளது.

சம்பவத்தின் போது வாகனத்தில் நான்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் வேனின் சாரதி ஆகியோர் இருந்தனர்.

வாகனத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், குழுவினருக்கு கடுமையான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கொஸ்லந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கைவிபத்து
Comments (0)
Add Comment