நேற்று (27) களுத்துறை – பண்டாரகம வீதியில் வேவிட, பிடவான பாலத்திற்கு அருகில் லொறியொன்றும் முச்சக்கர வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் முச்சக்கர வண்டி சாரதியும் பயணித்த இரண்டு குழந்தைகளும் பண்டாரகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், முச்சக்கர வண்டியின் சாரதி உயிரிழந்துள்ளார்.
பண்டாரகம, கிம்மன்துடாவ பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.