பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் மீது தாக்குதல்

யாழ்ப்பாணம் , மானிப்பாய் – காரைநகர் வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்தின் மீதும் , அதன் சாரதி மற்றும் நடத்துனர் மீதும்  புதன்கிழமை(19)  இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

குறித்த பேருந்து காரைநகர் – மானிப்பாய் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை பேருந்தினை வழிமறித்த இனம்தெரியாத குழுவொன்று பேருந்தின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி , சாரதி மற்றும் நடத்துனர் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

இலங்கைதாக்குதல்
Comments (0)
Add Comment