இரத்மலானை ரயில் நிலையத்திற்கு அருகே நேற்று (21) நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் 39 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.
நேற்றிரவு 9.45 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்ததோடு, மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.