திருகோணமலை பெரியகுளம் பகுதியில் காணி வழங்கக்கோரி கவனயீர்ப்பு போராட்டம்

திருகோணமலை பெரியகுளம் பகுதியில் தொழில் முயற்சியாளர்களுக்கு காணி வழங்கக்கோரி  மக்கள் சிலர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த போராட்டம் இன்று(10) திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.

அரச காணி ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பித்து பல காணி கச்சேரிகளுக்குச் சென்றும் நீண்டகாலமாக அரச காணிக்காக தாம் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை பெரியகுளம் பகுதியில் காணி வழங்கக்கோரி கவனயீர்ப்பு போராட்டம்
Comments (0)
Add Comment