கொழும்பின் சில பகுதிகளில் நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் இன்று (24) மாலை 5 மணி முதல் 16 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதற்கிணங்க கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் கொழும்பு 15 ஆகிய பகுதிகளில் நாளை (24) மாலை 5 மணி முதல் நாளை மறுதினம் (25)  சனிக்கிழமை காலை 9 மணி வரை 16 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அம்பத்தலே நீர் விநியோகத் தொகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

இதனால் நீரை முன்கூட்டியே சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

நீர்வெட்டு
Comments (0)
Add Comment