காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சான்றிதழ் (COA) வழங்கும் பணி

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சான்றிதழ் (COA) வழங்கும் பணி துரிதப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (09.08.2023) விசேட உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,

காணாமல் ஆக்கப்பட்டோரை தேடும் பணிகளை காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் (OMP) ஆரம்பித்துள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டறியும் செயல்முறையை மூன்று மாதங்களுக்குள் நிறைவு செய்யும் நோக்கில் தரவுகளை உட்படுத்தும் செயற்பாட்டை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சான்றிதழ் (COA) வழங்கும் பணி துரிதப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

இலங்கைகாணாமல் ஆக்கப்பட்டோருக்கான சான்றிதழ் (COA) வழங்கும் பணி
Comments (0)
Add Comment