கனேமுல்ல சஞ்சீவ கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு தலைவன் என்றழைக்கப்படும், கனேமுல்ல சஞ்சீவ   கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகளால் நேற்று புதன்கிழமை (13) கைது செய்யப்பட்டுள்ளார்.

நேபாளத்தின் காத்மாண்டுவிலிருந்து புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமானத்தின்  மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை புதன்கிழமை மாலை 5.46 மணியளவில் வந்தடைந்தார்.

போலிக்  கடவுச்சீட்டை பயன்படுத்தி கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்திருந்த அவர்,  குடிவரவு – குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கைகனேமுல்ல சஞ்சீவ கைது
Comments (0)
Add Comment