எளிமைப்படுத்தபடவுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை அடுத்த வருடம் எளிமைப்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பிள்ளைகள் மற்றும் பெற்றோர்களின் அழுத்தங்களை குறைக்கும் வகையிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும்,புலமைப்பரிசில் பரீட்சையில் எழுத்தறிவு மற்றும் எண்ணிக்கையை அளவிடுவதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

எதிர்காலத்தில் புலமைப்பரிசில் சித்திகளைப் போன்று 4ஆம் மற்றும் 5ஆம் தர வகுப்பறையில் முப்பது வீத புள்ளிகளைப் பெற வேண்டும்.

இதனடிப்படையில் மாணவர்கள் தொடர்ச்சியாக பாடசாலைக்குச் செல்வது முக்கியம் எனவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பல முன்மொழிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அந்த முன்மொழிவுகள் ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கைஎளிமைப்படுத்தபடவுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை
Comments (0)
Add Comment