தமிழ் ஓசை
தமிழ் ஓசை

“3 வாரங்களுக்கு சீமெந்து தட்டுப்பாடு தொடரும்”

0 155

நாட்டில் தற்போது நிலவும் சீமெந்துத் தட்டுப்பாடு எதிர்வரும் 3 வாரங்களுக்குத் தொடரும் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

3 வாரங்களின் பின்னர் சந்தைக்குத் தேவையான சீமெந்து தொகையை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இறக்குமதியாளர்கள் கூறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீமெந்து மற்றும் சீனி இறக்குமதியாளர்களுடன் அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அது மாத்திரமன்றி கடந்த தினங்களில் 230 முதல் 240 ரூபா வரையில் சீனியின் விலை உயர்வடைந்தது. எவ்வாறிருப்பினும் நுகர்வோர் அதிகார சபை என்ற ரீதியில் கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்துள்ளோம்.

எனவே கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் சதொச என்பவற்றில் சிவப்பு மற்றும் வெள்ளைச் சீனி என்பவற்றைக் கட்டுப்பாட்டு விலையில் விநியோகிப்பதற்கு உகந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.