Developed by - Tamilosai
நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவு வகுப்புக்களையும், மீளத் திறக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் 25 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஆரம்பப் பிரவு வகுப்புக்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகளை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சுமார் 06 மாதங்கள் பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன.
ஏனைய வகுப்புக்களை ஆரம்பிப்பது தொடர்பான திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும் அதேவேளை, கொரோனா பரவலுக்கு மத்தியில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு அனைத்துத் தரப்பினரினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.