தமிழ் ஓசை
தமிழ் ஓசை

2021 தரம் 5 புலமை பரிசில் மாணவர்களுக்கான அறிவித்தல்

0 465

2021 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று இரவு வௌியிடப்பட்டுள்ளது.

அதன்படி, பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk என்ற இணையத்தள முகவரிகளில் குறித்த பெறுபேறுகளை பார்வையிட முடியும் என பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், தரம் 5 புலமை பரிசில் பரீட்சை வினாத்தாள் மீள்திருத்தத்திற்காக விண்ணப்பிக்க விரும்புவோர் எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் வழமை போன்று நடத்தப்படும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, கொவிட் தொற்றுநோய் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

அதன்படி, 2021ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை சுமார் 5 மாத கால தாமதத்தின் பின்னர் கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் திகதி நடைபெற்றது.

சுகாதார வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு பரீட்சை நடைபெற்றது.

இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு 255,062 சிங்கள மொழி மூல பரீட்சார்த்திகளும் 85,446 தமிழ் மொழி மூல பரீட்சார்த்திகள் உட்பட மொத்தம் 340,508 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.

இது 2,943 பரீட்சை மத்திய நிலையங்களிலும், 108 விசேட மத்திய நிலையங்களிலும் இடம்பெற்றது.

Leave A Reply

Your email address will not be published.