Developed by - Tamilosai
இன்று (04-11- 2021) காலை வெலிசர பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
இச்சம்பவத்தில் காயமடைந்த மேலும் மூவர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியின் வெலிசர பகுதியில் இன்று காலை 9 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் இருந்து நீர்கொழும்பு திசையில் பயணித்த அதிசொகுசு வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி எதிர்த்திசையில் பயணித்த வாகனம் முச்சக்கரவண்டி மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
16 வயதுச் சிறுவன் ஒருவனே இவ்வாறு குறித்த அதிசொகுசு வாகனத்தை செலுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வேகக்கட்டுப்பாட்டை இழந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரே உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பில் மஹபாகே பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.