Developed by - Tamilosai
பொலன்னறுவையிலிருந்து திருகோணமலைக்குச் சுற்றுலா சென்ற பேருந்து வண்டி கந்தளாய் குளத்தினை அண்டிய பகுதியில் நிறுத்தப்பட்டு அங்குள்ள பகுதிகளைப் பார்வையிட்டுள்ளனர்.
இதன்போது அவர்களில் ஒருவர் பிரதான வீதியைக் கடக்க முற்பட்ட போது வீதியில் வேகமாகச் சென்ற சிறிய ரக பட்டா வாகனம் மோதியமையால் குறித்த நபர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய ஐ.கான்ஸ்க் சேனாரத்தின இவ்வாறு மோதுபட்டு, அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
அத்துடன் பட்டா வாகனத்தின் சாரதியைக் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.