Developed by - Tamilosai
எதிர்வரும் திங்கட்கிழமை(20) கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் 12 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக கிளிநொச்சி தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் அறிவித்துள்ளனர்.
பூநகரி வாடியடிச் சந்தியில் அமைந்துள்ள நீர்த் தாங்கியில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தம் மற்றும் பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
திங்கட்கிழமை மாலை 6 மணி முதல் மறு நாள் செவ்வாய் கிழமை(21) காலை 6 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.