தமிழ் ஓசை
தமிழ் ஓசை

வௌிநாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கான அறிவிப்பு

0 443

இலங்கையின் பல பகுதிகளில் தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக நாடு முழுவதும் காவல்துறை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வெளிநாடு செல்வதற்காக விமான நிலையம் செல்வோருக்கு முக்கிய அறிவிப்பொன்று வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள் தமது கடவுச்சீட்டுஇ பயணச்சீட்டை என்பவற்றை ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என தகவல் வெளியாகியுள்ளது.

கொழும்பில் இன்று காலை முதல் பதற்ற நிலை நிலவி வருகிறது.

இன்று காலை அலரி மாளிகைக்கு முன்பாக அரசாங்கம் மற்றம் மகிந்தவிற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் முன்னெடுத்தவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் முன்னெடுத்து வந்தவர்களை தாக்கிய நிலையில் தொடர்ச்சியாக அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது.இதனை தொடர்ந்து இலங்கை முழுவதும் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.