Developed by - Tamilosai
இதுவரை உலகளவில் குரங்கு அம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 780ஆக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
இது ஒரு வாரத்திற்கு முன்பு பதிவான தொற்றுகளை விட அண்ணளவாக மூன்று மடங்கு அதிகமானதாக பதிவாகியுள்ளது.
மத்திய மற்றும் மேற்கு ஆபிரிக்காவிற்கு வெளியே பரவலாக பரவுவது இதுவே முதல் முறையாகுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குரங்கு அம்மை நோய் 27 நாடுகளில் பரவியுள்ளது.
இந்த புதிய தொற்றுகளில் பெரும்பாலானவை ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிலும், மெக்சிகோ, அர்ஜென்டினா, மொராக்கோ மற்றும் ஐக்கிய அரபு அமீரகங்களிலும் சிறிய எண்ணிக்கையில் உள்ளன.
குரங்கு அம்மை நோயினால் இதுவரை பிரித்தானியாவில் 207 பேர், ஸ்பெயினில் 156 பேர் மற்றும் போர்த்துகலில் 138பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.