Developed by - Tamilosai
வெலிசர பகுதியில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
இச்சம்பவத்தில் காயமடைந்த மேலும் மூவர் ராகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியின் வெலிசர பகுதியில் இன்று காலை 9 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றது.
கொழும்பிலிருந்து நீர்கொழும்பு திசையில் பயணித்த அதிசொகுசு வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி எதிர்த் திசையில் பயணித்த முச்சக்கரவண்டி மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களுடன் மோதி விபத்துக்குள்ளானது.
16 வயதுச் சிறுவன் ஒருவனே இவ்வாறு குறித்த அதிசொகுசு வாகனத்தை செலுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வேகக்கட்டுப்பாட்டையிழந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரே உயிரிழந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் 16 வயதுச் சிறுவன் மற்றும் சிறுவனின் தந்தை ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மஹபாகே பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.