தமிழ் ஓசை
தமிழ் ஓசை

வெற்றியைத் தழுவிய இலங்கை அணி😃

0 72

நேற்று இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

அவுஸ்திரேலிய அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 9 விக்கெட்டுகளை 47.4 ஓவர்கள் நிறைவில் இழந்து 220 ஓட்டங்களைப் பெற்றது. இந்நிலையில் மழை காரணமாக போட்டி சில மணிநேரம் இடைநிறுத்தப்பட்டது.

இதன் காரணமாக டக்வத் லூயிஸ் முறைமைக்கு அமைய போட்டி 43 ஓவர்களுக்கு மட்டுபடுத்தப்பட்டு, அவுஸ்திரேலிய அணிக்கு 216 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி சகல விக்கெட்டுக்களையும் 37.1 ஓவர்களில் இழந்து 189 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

Leave A Reply

Your email address will not be published.