Developed by - Tamilosai
கிளிநொச்சியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.
பரந்தன் சிவபுரம் பகுதியைச் சேர்ந்த முத்தையா கேதீஸ்வரன் (வயது- 27) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.
தற்காலிக கொட்டகை ஒன்றில் நேற்றிரவு இவர் தங்கியிருந்த நிலையில் இன்று காலை உடலில் கடுமையான வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.