தமிழ் ஓசை
தமிழ் ஓசை

வீட்டின் மீது மண்மேடு சரிவு – 3 சடலங்கள் மீட்பு

0 293

 ரம்புக்கன, தொபேமட பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவால் 4 பேர் வீட்டினுள் சிக்கிக் கொண்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு மண்சரிவில் சிக்கிக் கொண்டவர்களில் மூவரின் சடலங்கள்  மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், அவருடைய 8 வயது மகள் மற்றும் 14 வயதுடைய உறவுக்கார சிறுமியின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மண்சரிவில் சிக்கிக் கொண்ட தந்தை மீட்கப்பட்டு கேகாலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.