Developed by - Tamilosai
கிளிநொச்சி – கரைச்சி பிரதேச சபை அமர்வில் கலந்து கொண்டிருந்த சபை உறுப்பினர் சண்முகராஜ ஜீவராஜா, பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் தமது கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்.
விலை அதிகரிப்பால் மக்களுக்கு சுமையை ஏற்படுத்தியுள்ள அத்தியாவசியப் பொருட்களுடன் அவர் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற பிரதேச சபை அமர்வில் கலந்து கொண்டுள்ளார்.
இதன்போது, சீமெந்து, பால்மா, மா, மஞ்சள், சமையல் எரிவாயு சிலிண்டர்கள் என்பவற்றை உடலில் சுமந்தும், கழுத்தில் தூக்கு கயிற்றினை அணிந்தும் அமர்வில் அவர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும், மக்களை பெரும் சுமைக்குள் தள்ளியுள்ளதாகவும் அரசாங்கத்தினை இதன்போது சபையில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்நிலையில் பிரதேச சபை உறுப்பினரின் போராட்டம் நியாயமானது என பிரதேச சபைத் தவிசாளர் சபையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.