தமிழ் ஓசை
தமிழ் ஓசை

விபத்து விவகாரம்; சம்பிக்க உள்ளிட்ட மூவர் மீதான வழக்கு 30 ஆம் திகதி விசாரணைக்கு

0 550

 முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட மூவர் மீதான வழக்கு விசாரணையை எதிர்வரும் 30 ஆம் திகதி எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ராஜகிரிய பகுதியில், கடந்த 2016 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க பயணித்த வாகனம் விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்த விவகாரத்தில், சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட மூவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்கு கொழும்பு பிரதான மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் இன்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.

இதன்போது சம்பிக்க ரணவக்க, அவரது சாரதியாக மற்றும் வெலிக்கடை பொலிஸ் முன்னாள் பொறுப்பதிகாரி ஆகியோருக்கு எதிரான வழக்கை 30 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.