Developed by - Tamilosai
நாட்டில் வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடையை மேலும் ஆறு முதல் ஏழு மாதங்களுக்கு நீடிக்க எதிர்பார்க்கப்படுவதாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார்.
தற்போது வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை வழங்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் டொலர் கையிருப்பில் இல்லாததன் காரணமாக மார்ச் 2020 முதல் வாகன இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.