Developed by - Tamilosai
கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று காலை கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்க அலுவலகம் முன்பாக இந்தப் போராட்டம் இடம்பெற்றது.
இறுதி யுத்தத்தின் போது காணாமல் போனவர்கள், கடத்தப்பட்டவர்கள், இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி 1711 ஆவது நாளாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மாதம் தோறும் 30 ஆம் திகதி வீதியில் கவனயீர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.