தமிழ் ஓசை
தமிழ் ஓசை

வடமாகாணத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் வாய்ப்பு!

0 263

வடமாகாணத்தில் இன்று திங்கட்கிழமை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாக யாழ்.பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

 கடற்பகுதி கொந்தளிப்பாக இருக்கும் எனவும் மீனவர்கள் கடற்றொழிலுக்குச் செல்வதைத் தவிர்ப்பது நல்லது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்று ஒருங்கிணைவு காரணமாக இன்று முதல் வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது.

அதேவேளை வங்காள விரிகுடா கடற்பகுதியின் தென்கிழக்கு பகுதியில் தோன்றியுள்ள தாழமுக்கம் காரணமாக இன்று (திங்கட்கிழமை) பிற்பகலுக்குப் பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் பரவலாக கனமானது முதல் மிகக் கனமான மழை கிடைக்க வாய்ப்புள்ளது.  இது எதிர்வரும் 13.11.2021 ஆம் திகதிவரை தொடரும்.

எதிர்வரும் 09.11.2021 முதல் தாழமுக்கம் மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலைமையில் காணப்படும். எனவே மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்ப்பது நல்லது.

வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் நெற்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் களைநாசினி விசிறுதல் மற்றும் உரமிடுதல் செயற்பாடுகளை எதிர்வரும் 13.11.2021 வரை தவிர்ப்பது நல்லது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.