Developed by - Tamilosai
வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தலைமையில் யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற அபிவிருத்தி சார்ந்த கூட்டத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது.
இதனை காரணமாக தான் வெளியேறியதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் தெரிவித்துள்ளார்.
மொழி பெயர்ப்பாளர் ஒருவரை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் சுமார் ஒரு மணித்தியாலயத்திற்கும் மேலாக இந்த கோரிக்கை தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.
இதனையடுத்து தாம் அந்த கூட்டத்தில் இருந்து இடைநடுவே வெளியேறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார்.