தமிழ் ஓசை
தமிழ் ஓசை

லிஸ்டீரியா நோயால் பெண்ணொருவர் உயிரிழப்பு…!

0 18

சிவனொளிபாத மலைக்கு செல்லும் ஒரு வழியில், சிறிய கடை ஒன்றை நடத்திச் சென்ற பெண் ஒருவர், லிஸ்டீரியா நோயால் உயிரிழந்துள்ளார். சுகாதாரத்துறையால் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் லிஸ்டீரியா நோயால் பாதிக்கப்பட்ட, நோய் அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து, கடந்த மாதம் 23ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது, அவருக்கு லிஸ்டீரியா நோய் தொற்றியுள்ளமை, ஆரம்ப பரிசோதனைகளில் உறுதியானதாக, சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் ரஞ்சித் பட்டுவந்துடாவ தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.