Developed by - Tamilosai
மன்னாரில் யுத்த காலத்தில் புதைக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் தங்கம் உள்ளிட்ட பொருட்களுக்காக முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணியில் ஈடுபட்ட 6 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது சந்தேக நபர்கள் பயணித்த வாகனமும், அகழ்வுக்குப் பயன்படுத்தப்பட்ட பொருட்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 26 மற்றும் 60 வயதுடைய ஹெட்டிமுல்ல, கொடியாக்கும்பு, பாணந்துறை, பொரலந்த மற்றும் ஹல்பே ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்நிலையில் சந்தேக நபர்கள் மன்னார் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.