Developed by - Tamilosai
மாவீரர் வாரத்தை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழகத்தில் இன்றையதினம் பல்கலைக்கழக மாணவர்களினால் மாவீரர் நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
முழந்தாளில் மாணவர்கள் இருந்து வீரமறவர்களுக்கு தமது ஆத்மார்த்தமான அஞ்சலியை செலுத்தியுள்ளனர்.
குறிப்பாகப் பல்கலைக்கழகச் சூழலில் இராணுவத்தினரும், பொலிஸாரும், இராணுவ, பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரும் மாணவர்களை அச்சுறுத்துகின்ற வகையில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் மாணவர்கள் ஆத்மார்த்தமான முறையில் தமது அஞ்சலிகளைச் செலுத்தியுள்ளனர்.