Developed by - Tamilosai
யாழ்.பருத்தித்துறை கடற்பரப்பில் நேற்றய தினம் இரவு இந்திய – இலங்கை மீனவர்களுக்கிடையில் முறுகல் நிலையேற்பட்டதுடன், இரு இந்திய இழுவை படகுகள் முற்றுகையிடப்பட்ட நிலையில் கடற்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து இழுவை படகுகளை கைப்பற்றியதுடன், இந்திய மீனவர்களையும் கைது செய்தனர்.
பருத்தித்துறை கடல் எல்லைக்குள் நுழைந்த இந்திய இழுவை படகுகள் அங்கு தொழில் செய்து கொண்டிருந்த நிலையில் அதிரடியாக பருத்தித்துறை மற்றும் சுப்பர்மடம் பகுதிகளில் இருந்து சுமார் 15 வரையான படகுகள் இந்திய இழுவை படகுகளை முற்றுகையிட்டு வலைகள், மீன்களை கைப்பற்றினர்.