Developed by - Tamilosai
சீரற்ற காலநிலையால் யாழ். மாவட்டத்தில் 69 குடும்பங்களைச் சேர்ந்த 247 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் என். சூரியராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த 2 நாளாக மழையுடன் கூடிய காலநிலை அதிகரித்துக் காணப்படுவதுடன் குறித்த மழையுடன் கூடிய நிலைத் தாக்கத்தால் ஊர்காவற்துறை, தெல்லிப்பழை, சங்கானை, சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 69 குடும்பங்களைச் சேர்ந்த 247 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 4 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
பாதிக்கப்பட்டோரின் விவரங்கள் அந்தந்த பிரதேச செயலர் ஊடாகப் பெறப்பட்டு அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.