தமிழ் ஓசை
தமிழ் ஓசை

யாழில் புகையிரதம் மோதி ஒருவர் பலி

0 63

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த குளிரூட்டி புகையிரதத்துடன் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

இன்று மதியம் யாழ்ப்பாணம் அரியாலை பூம்புகார் பகுதியில் இவ் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் பாதுகாப்பற்ற புகையிரத கடவை உள்ளதாகவும், அதனால் அப்பகுதியில் அடிக்கடி புகையிரத விபத்துக்கள் இடம்பெறுவதாகவும் , தமக்கு பாதுகாப்பான புகையிரத கடவையை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊர் மக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.