Developed by - Tamilosai
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி தனங்கிளப்புப் பகுதியில் டிப்பர் வாகனமும் பட்டா ரக வாகனமும் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் படுகாயமடைந்தனர்.
குறித்த விபத்து இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்திலிருந்து பூநகரி நோக்கிச் சென்று கொண்டிருந்த பட்டா ரக வாகனமும், யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
இச்சம்பவத்தில் 6 பேர் காயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.