Developed by - Tamilosai
நேற்றைய தினம்(01) யாழ். நெல்லியடி வதிரி பகுதியில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறின் போது 76 வயது பெண் ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
நேற்று(01) முற்பகல் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் தலையில் தாக்கப்பட்ட நிலையில் குறித்த பெண் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார். சம்பவம் தொடர்பில் இருவர் நெல்லியடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாக்குதலின் பின்னர் குறித்த பெண் உயிரிழந்துள்ளார். சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.