Developed by - Tamilosai
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 23 பேர் உயிரிழந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (17-10 -2021) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 507 ஆக அதிகரித்துள்ளது.