Developed by - Tamilosai
முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு சிறிலங்கா இராணுவத் தரப்பினால் பாரிய தடைகள் ஏற்படுத்தப்பட்ட போதிலும், தடைகளை உடைத்து பல்வேறு இடங்களிலும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
முல்லைத்தீவு கடற்கரையில் சுடர் ஏற்றுவதற்காக தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும் வாலிபர் முன்னணி பொருளாளருமான பீற்றர் இளஞ்செழியன் மற்றும் அவரது மனைவி உட்பட பலர் சுடர் ஏற்றுவதற்காக சென்ற போது முல்லைத்தீவு கடற்கரையில் வைத்து பீற்றர் இளஞ்செழியனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் காவல்துறையினருக்கும் மக்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டிருந்தது. முல்லைத்தீவு கடற்கரையில் இராணுவம் மற்றும் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்த நிலையில் இராணுவத்தினர் மோட்டார் சைக்கிள்களில் சென்று மக்களை அச்சுறுத்தியிருந்தனர்.
முல்லைத்தீவு கடற்கரைக்கு சென்ற பொதுமக்கள் கடற்கரையில் பொதுச் சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தியுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியிலும் உணர்வுபூர்மாக மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.