Developed by - Tamilosai
கனிய எண்ணெய் இறக்குமதி, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஏகபோக அதிகாரத்தை இரண்டு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கியமை,
உள்ளிட்ட அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பல தொழிற்சங்கங்கள் தமது கடமைகளில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த உத்தியோகபூர்வமற்ற வேலைநிறுத்தம் காரணமாக எரிபொருள் கொள்கலன்களுக்கு எரிபொருள் ஏற்றுவதும் நிறுத்தப்பட்டுள்ளதன் காரணமாக, பல பிரதேசங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.