Developed by - Tamilosai
இலங்கையில் எரிபொருளின் விலையை மீண்டும் அதிகரிக்க அரசாங்கம் தயாராகி வருவதாக ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஒரு லீட்டர் எரிபொருளின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எரிபொருள் நெருக்கடி நிலை காரணமாக பொதுமக்கள் பல மணிநேரம் வீதிகளில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுடன், இரவு பகலாக காத்திருந்தும் எரிபொருள் கிடைக்காமல் திரும்பிச் செல்லக் கூடிய நிலையையும் காணக்கூடியதாக உள்ளது.