Developed by - Tamilosai
நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் உள்ள மின் பிறப்பாக்கியில் ஏற்பட்ட கோளாறு தற்போது சரி செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தென்னிலங்கை ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய அசவ்வியின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
இருப்பினும், 2அவது மின்பிறப்பாக்கி இன்னும் முழுமையாக சரி செய்யப்படவில்லை என்றும், முழுமையாக செயல்பட இன்னும் 2 நாட்கள் ஆகும்.
இதனால் இன்றும் நாளையும் மின்சாரத் தடை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் இன்றும் நாளையும் மின்சாரத் தடை நடைமுறையில் இருக்கும் என இலங்கை மின்சார சபை தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மாலை 6 மணியிலிருந்து இரவு 9.30 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணி நேர மின்சாரத் நடைமுறையில் இருக்கும்.