தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மின்சாரத்தை மிச்சப்படுத்த வீதிவிளக்குகளை அணைப்பது பேராபத்தா?

0 365

மின்சாரத்தை மிச்சப்படுத்த வீதிவிளக்குகளை அணைப்பது பெண்களின் பாதுகாப்பு உட்பட பல சமூக பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்று பல நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இலங்கையில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுவது அதிகரித்து வருவதாகவும், வீதி விளக்குகளை அணைப்பது நிலைமையை மேலும் மோசமாக்கும் எனவும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பகல் மற்றும் மின்சாரம் தடைப்படும் போது பெண்கள் பல்வேறு வகையான பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் நாட்டில் இரவில் வீதி விளக்குகளை அணைப்பது பாரிய பிரச்சினையாக அமையும் என நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இந்த முடிவு சமூகத்தில் பல பிரச்சினைகளை ஏற்படுத்துவதோடு பெண்களை மிகவும் பாதுகாப்பற்றவர்களாக மாற்றும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி விசாகா சூரியபண்டார தெரிவித்தார்.

இது நுண்ணுணர்வுடன் பார்க்கப்பட வேண்டிய விடயம் எனவும், இவ்வாறான நெருக்கடியான நிலையில் அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களினால் பாதிக்கப்படும் தரப்பினர் மீது கவனம் செலுத்துவது சமூகத்தின் பொறுப்பு எனவும் மகளிர் ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி கலா பீரிஸ் தெரிவித்தார்.

இந்த மன்றத்தின் கருத்து என்ன என மகளிர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்றத்தின் தலைவி, இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளேவிடம் கேட்டபோது, ​​இது உண்மையில் பெண்களை மிகவும் பாதுகாப்பற்ற முறையில் பாதிப்பதாகத் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.